இந்த வருடம் சிங்கப்பூரின் ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். அன்று சிங்கப்பூர்க்கு வந்த நம் முன்னோர்களால் தான், நாம் இன்னும் நம் பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகிறோம். இனி வரும் காலத்தில், இளைஞர்களாகிய நாம், நம் பண்பாட்டை மதித்து நடக்க வேண்டும். இதன் மூலம் நம் நாட்டின் பண்பாட்டைக் காக்க நம் முன்மாதிரியாக இருப்போம்.